News June 27, 2024

நீட் வினாத்தாள் முறைகேடு வழக்கில் 2 பேர் கைது

image

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக, முதல்முறையாக பிஹாரில் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News August 16, 2025

ரஷ்யா போரை நிறுத்தாது: உக்ரைன் அதிபர் உருக்கம்

image

தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

News August 16, 2025

திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

image

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!