News June 27, 2024

நீட் வினாத்தாள் முறைகேடு வழக்கில் 2 பேர் கைது

image

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக, முதல்முறையாக பிஹாரில் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த இருவரும், நீட் தேர்வு எழுதிய சுமார் 24 மாணவர்களுக்கு அறையை புக் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில், அடுத்தடுத்த நபர்கள் கைதுசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 7, 2026

மார்ச் 15-ல் தேர்தல் தேதி?

image

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி வரும் 15 அல்லது 16-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் தனது ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையர்கள் இன்று முடிக்கிறார்கள். நாளை முதல் 3 நாள்களுக்கு மேற்குவங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 5-7 கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News March 7, 2026

3 நாள்களுக்கு மட்டும் இதை செய்யுங்க.. அப்புறம் பாருங்க!

image

எப்போதும் போனும் கையுமாகவே இருக்கிறீர்களா? இது உங்கள் மூளை திறனை அதிகமாக பாதிக்கும். எனவே, குறைந்தது 3 நாள்களுக்கு போனை நோண்டாமல் இருந்தால் மூளையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவது ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் யூனிவர்சிட்டி ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உங்கள் ஞாபக சக்தியும், உடல்நலனும் கூட மேம்படலாம். எனவே இன்றிலிருந்தே இதை ட்ரை பண்ணுங்க மக்களே.. நண்பர்களுக்கு SHARE THIS.

News March 7, 2026

வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

image

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!