News June 27, 2024
அறியாமையில் உளறுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்

இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதும் மதித்ததில்லை என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். செங்கோல் பற்றிய சமாஜவாதி தலைவர்களின் கருத்து, அரசியல் அவர்களின் அறியாமையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அங்கிருந்து அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்.பி ஆர்.கே.சௌத்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 13, 2026
BREAKING: சிலிண்டர் விலை ₹6,000? அதிர்ச்சி

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் தட்டுப்பாடு இல்லை எனக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் வணிக சிலிண்டர் ₹6,000 முதல் ₹6,500 வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஹோட்டல் பில்லுடன் <<19368805>>கேஸ் கட்டணமும்<<>> சேர்க்கப்படும் நிலையில், இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News March 13, 2026
IPL 2026: ரூல்ஸை மாற்றிய BCCI!

2026 IPL சீசனுக்கு முன்பாக, அணிகளின் பயிற்சிக்கு BCCI புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது *ஒரு அணி பயிற்சி செய்த ஆடுகளத்தில் மற்றோர் அணி பயிற்சி செய்யக் கூடாது *ஒவ்வொரு அணியும் தனி ஆடுகளத்தில்தான் பயிற்சி செய்ய வேண்டும் *அதிகபட்சமாக 2 பயிற்சி போட்டிகளை விளையாடலாம் *மின் விளக்குகள் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் யூஸ் பண்ணக்கூடாது *பயிற்சி ஆட்டத்தை பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
News March 13, 2026
சட்டவிரோத பணப் பரிமாற்றம்.. ஏ.எம்.மூர்த்தி கைது

₹25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் ஏ.எம்.மூர்த்தியை ED கைது செய்துள்ளது. கடந்த 2 நாள்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வரும் தேர்தலில் இக்கட்சி திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. சமீபத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் மூர்த்தி கலந்துகொண்டார்.


