News June 27, 2024
நாகை: விவசாயிகள் குறித்த கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை கீழ்வேளூர் தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் ஒருபோக சாகுபடி செய்வதற்காகவும் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 6, 2026
நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News April 6, 2026
நாகை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

நாகை மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
நாகை: குடும்பத்தோடு இணைந்த மாற்றுக்கட்சியினர்!

நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நேற்றிரவு இணைந்தனர்.
தோழர் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி. செல்வம் கட்சி கொடி ஏற்றி புதிய உறுப்பினர்களை வரவேற்றார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க உறுதி எடுக்கப்பட்டது.


