News June 27, 2024
நிஃப்டி 24,000 புள்ளிகளை கடந்து சாதனை

கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன. இதனையடுத்து, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 24,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காலத்தில் 8,000 புள்ளிகள் வரை சரிந்த நிஃப்டி, நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதாவது, 2020 ஏப்ரலில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 3 லட்சம் ரூபாய்.
Similar News
News October 15, 2025
திருவள்ளூரில் இலவச மருத்துவ முகாம்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். நாளை (அக்.16) மாவட்ட மருத்துவ அலுவலர் தலைமையில் நடத்தப்படும். இம்முகாம் நடக்கும் பகுதிகள் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
உங்கள் குழந்தைகள் அதிபுத்திசாலி ஆகணுமா?

உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்க அவர்களுக்கு கல்வி மட்டும் போதாது. கூடவே சில பழக்க வழக்கங்களை அவர்களுக்குள் விதைப்பது அவசியம். ➤பாட புத்தகங்களை தாண்டி, கதை புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவியுங்கள் ➤செஸ், Puzzle, விடுகதை போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள் ➤Sports மிக மிக அவசியம் ➤தூங்கும் முன், தூங்கி எழுந்ததும் போன் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அனைத்து பெற்றோர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News October 15, 2025
வெளிநாடு செல்ல கட்டுப்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம் Happy

INX மீடியா வழக்கில் காங்., MP கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்ல விதித்திருந்த கட்டுப்பாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. INX மீடியா வழக்கில் ஜாமின் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்ல அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை தளர்த்த கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிபதி ரவீந்தர் துடேஜா கட்டுப்பாட்டை தளர்த்தி உத்தரவிட்டார்.