News June 27, 2024

3ஆவது முறையாக ஒரே அரசு: திரௌபதி முர்மு

image

60 ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்திருப்பதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். நிலையான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமெனக் கூறிய அவர், பாஜக கொள்கைகளின் மீது நம்பிக்கை வைத்துதான் மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர் என்றார். மக்களின் இம்முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான ஆதரவை காட்டுவதாகவும் கூறினார்.

Similar News

News March 25, 2026

மகிழ்ச்சியான மனநிலைக்கு சிறந்த பழக்கங்கள்!

image

➤விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ➤சிறிய தருணங்களை ரசிப்பது. ➤சாகச பயணங்கள் மேற்கொள்ளுங்கள். ➤உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ➤தினமுன் நன்றாக தூங்குங்கள். ➤தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். ➤நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பேசுதல். ➤உங்களுக்கென அதிக நேரத்தை ஒதுக்குங்கள்.

News March 25, 2026

விஜய் விவகாரம்.. சமுத்திரக்கனி விளக்கம்

image

விஜய் குறித்து பேசியது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது என்று கூறிய அவர், அது ஒரு அக்கறை, வலி மற்றும் என் மனதில் பட்டதாக நான் பார்க்கிறேன் என்றார். மேலும், வீடியோ எடுக்கும்போதே தனக்கு தெரியும் என்றும், வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலையை பாத்துடாங்க எனவும் தெரிவித்தார்.

News March 25, 2026

சர்தார் வல்லபாய் பொன்மொழிகள்

image

➤கடின உழைப்பும் தியாகமுமே வெற்றியின் அடித்தளம். அவை இல்லாமல், மிகப்பெரிய கனவுகள் கூட நிறைவேறாமல் போய்விடும். ➤முயற்சியில் காட்டும் நிலைத்தன்மையும் மனவுறுதியும், சாதாரணச் செயல்களை அசாதாரணச் சாதனைகளாக உருமாற்றுகின்றன. ➤நாம் சமத்துவ உணர்வை வளர்த்து, தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ➤இன்பமும் துன்பமும் காகிதப் பந்துகள் போன்றவை.

error: Content is protected !!