News June 27, 2024
தருமபுரி: எஸ்பி அலுவலத்தில் 87 மனுக்களுக்கும் தீர்வு

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News February 24, 2026
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி(64), அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் தங்களது நிலத் தகராறு முறித்து பலமுறை அளவீடு செய்ய கோரிக்கை வைத்தும் காலதாமதம் ஆனதால், தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். உடனே பாதுகப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
News February 24, 2026
தருமபுரியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தருமபுரி மாவட்டம் ராணி மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (23). தர்மபுரி அரசு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இவர் போட்டி தேர்வுக்கு படித்து வந்த தனது சகோதரியுடன் தர்மபுரியில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்ரீநிதி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்
News February 24, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில், நேற்று (பிப்.23) இரவு முதல் இன்று (பிப்.24) காலை 6 வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு மேலும் பாதுகாப்பு அடைந்து பயன்பெறலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஷேர்!


