News June 27, 2024
5 ஜி: அலைக்கற்றை ஏலத்தில் ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

அதிவேக இணைய சேவைகளுக்கான 10ஆவது அலைக்கற்றை ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் வெறும் ₹11,300 கோடிக்கு (12%) மட்டுமே ஏலம் போயுள்ளது. 8 பேன்ட்களில் (10.5 ஜிகா ஹெர்ட்ஸ்) ₹96,238 கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றையை தொலைதொடர்பு துறை ஏலம்விட்டது. முதல் நாளில் ₹11,000 கோடிக்கும், 2ஆம் நாளில் வெறும் ₹300 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தத்தில் ஏர்டெல் ₹6,857 கோடிக்கு ஏலம் பெற்றுள்ளது.
Similar News
News October 17, 2025
எப்படி இருக்கிறது பைசன்: காளமாடன்?

கபடி விளையாட்டும், அதனை சுற்றி நடக்கும் அரசியலும்தான் ‘பைசன்: காளமாடன்’. ப்ளஸ்: எழுத்தாளராக மாரி செல்வராஜ் மீண்டும் வென்றிருக்கிறார். கடைசி 20 நிமிடங்களில் அசத்தி விட்டார். துருவ் விக்ரம் கடின உழைப்பை கொடுத்துள்ளார். பசுபதி திரையில் மிரட்டுகிறார். நிவாஸ்.கே.பிரசன்னாவின் இசை வருடுகிறது. பல்ப்ஸ்: காதல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் படம் கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது.
News October 17, 2025
டிகிரி முடித்தாலே அரசு வேலை; APPLY NOW!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் உள்ளன. Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இப்பணிகளுக்கு ₹9,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்த இளைஞர்கள் அக்.18-ம் தேதிக்குள் nats.education.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 17, 2025
பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.