News June 27, 2024
நிறவெறி சர்ச்சையில் சிக்கியவருக்கு மீண்டும் பதவி

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, உலகில் ஜனநாயகத்துக்கு ஒளிரும் முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதாக கூறிய அவர், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக பேசியது சர்ச்சையானது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் வெடித்த இந்த சர்ச்சையால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
குழந்தைகள் இந்த வகை Slipper-களை அணியக்கூடாதா?

குழந்தைகள் விரும்பி அணியும் கிராக்ஸ் வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால் முதுகுதண்டு பிரச்னை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கிராக்ஸ்-கள் Croslite என்ற இலகுவான பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் சரியான கிரிப் கிடைக்காததால், இதுபோன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
News September 18, 2025
இந்தியா மீதான வரி 15% ஆகக் குறையும்: ஆனந்த நாகேஸ்வரன்

இறக்குமதி வரி தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர்(CEA) ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரஸ்பர இறக்குமதி வரியானது 15% ஆகக் குறையும் என்ற அவர், வரும் நவம்பர் 30-க்குள் கூடுதலாக விதிக்கப்பட்ட 25% வரியை அமெரிக்கா விலக்கிக் கொள்ளக்கூடும் என்றும் கணித்துள்ளார்.