News June 27, 2024
வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் காலமானார்

ஆவடி அருகே வெள்ளானூர் வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் (82) நேற்று ( ஜூன் 26) மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று (ஜூன் 27) பிற்பகல் 3 மணி அளவில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நடைபெறும். மதியம் 2.45 மணி வரை மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
கும்மிடிப்பூண்டி; இலங்கை தமிழர் முகாமில் படுகொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலைவராக இருந்தவர் சிவகுமார் என்கின்ற கண்ணன்(42). நேற்று(மார்ச் 7) இரவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பகுதியில் இருதரப்பு சமரசத்திற்கு சென்ற சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 8, 2026
புழல்: கால்வாயில் இளம்பெண் சடலம்!

திருவள்ளூர்: புழல் அறிஞர் அண்ணா நகர் ரெட்டேரி கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், பிணமாக கிடந்தது சென்னை ராஜமங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்த பழனி என்பவரது மகள் ஆசா கீர்த்தி(26) என்பதும், கடந்த மார்ச் 5ஆம் தேதி வீட்டில் மாயமானவர், வேலை கிடைக்காத விரக்தியில் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது.
News March 8, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க


