News June 27, 2024
Byju’s நிறுவனத்தின் மீது விசாரணை தொடர்கிறது

Byju’s நிறுவனம் ₹28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பெற்றிருப்பது தெரியவந்ததால், அந்நிய செலாவணி விதிகளை மீறியதாக, அந்த நிறுவனத்தின் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், நிதிமோசடி விவகாரத்தில் Byju’s அரசால் விடுவிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இச்செய்தி தவறானது என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் இவரா?

டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷஹீன் ஷாஹித், தீவிரவாத செயல்களை மறைக்க டாக்டராக செயல்பட்டு வந்ததாக உளவுத் தகவல் கூறுகிறது. லக்னோவில் இருந்தபடி அவர், தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்தியாவில் பெண்களை மூளைச்சலவை செய்து ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
News November 11, 2025
சற்றுமுன்: தங்க மகன் காலமானார்

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ‘தங்க மகன்’ விஷ்ணு ரகுநாதன்(27) விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விஷ்ணுவும், அவருடன் சென்ற மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. 2024-ல் ஹாங்காங் ஆசியக் கோப்பை தொடரில் படகு போட்டியில்(kayaking) தங்கம் வென்று விஷ்ணு அசத்தியது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
‘நாங்கள் இந்தியர்கள்’ கைதான முஜாமிலின் சகோதரர்

ஃபரீதாபாத்தில் வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைதான டாக்டர் முஜாமிலின் சகோதரர் ஆசாத் ஷகில், ‘நாங்கள் மனதார இந்தியர்கள், இந்தியாவுக்காக கல்வீச்சுக்கு ஆளானோம்’ என்று கூறியுள்ளார். எல்லோரும் அவரை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இச்சம்பவத்தால், தனது சகோதரியின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


