News June 27, 2024
ராகுல் காந்திக்கு உள்ள அதிகாரங்கள்

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, மக்களவை எதிர்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பல முக்கிய துறைகளின் அதிகாரிகள் நியமனத்தில், அவருடைய பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். பல கூட்டு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருப்பதற்கான உரிமை அவருக்கு உள்ளது. CBI, மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும் தேர்வு குழுக்களிலும் அவர் இடம்பெறுவார்.
Similar News
News October 30, 2025
33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.
News October 30, 2025
இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
News October 30, 2025
சொந்த நாடு திரும்ப ஆசைப்படும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேறி டெல்லியில் ஷேக் ஹசீனா அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில், டெல்லியில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாகவும், ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்ப ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும், வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடைவிதித்தது பெரும் அநீதி என்ற அவர், தேர்தல் நியாமான முறையில் நடக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.


