News June 26, 2024
EX அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் ₹5 லட்சம் அபராதம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், அவரது உறவினர் மகேஷ் என்பவருக்கு ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி தனது நிலத்தை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது மகேஷ் புகாரளித்திருந்தார். இதில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஜெயக்குமார் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 583 நாள்களாக மகேஷ் பதிலளிக்காததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
மதுரை: 38,247 போ் 10ம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுகின்றனா்

மதுரை மாவட்டத்தை பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 214, அரசு உதவிபெறும் பள்ளிகள் 84, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 181 என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.
இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் 10ம் வகுப்புத் தோ்வை எழுதுகின்றனா். அனுமதி எண் ஒட்டுதல் பணியில் ஆசிரியா்கள் ஈடுபட்டனர்.
News March 11, 2026
1960-ல் ஒரு LPG சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. 1960-ல் ₹10 வரை மட்டுமே இருந்த விலை, 2026-ல் ₹928-ஐ எட்டியுள்ளது. 1990-ல் ₹120 ஆகவும், 2010-ல் ₹400 ஆகவும் இருந்த விலை, இன்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. சர்வதேச எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், மாறிவரும் மானியக் கொள்கைகள் மற்றும் பணவீக்கம் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
News March 11, 2026
நாட்டை மட்டுமில்லை.. வீட்டையும் பாத்துக்கணும்: CM

TN-ல் இருந்து குடிமைப் பணிகள் (UPSC) தேர்வில் வென்ற 60 பேரை ’ரியல் ஹீரோஸ்’ என CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், UPSC பயிற்சி பெற முன்பு டெல்லி செல்லும் நிலை இருந்ததாகவும், ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் அந்நிலை மாறியிருப்பதாகவும் பேசியுள்ளார்.


