News June 26, 2024
நெல்லை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 26) விடுத்துள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினருக்கு சிறு தொழில் வியாபாரம் செய்வதற்கான கடனுதவி வழங்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ. 211 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெறலாம்.
Similar News
News March 9, 2026
நெல்லையில் பொது ஏலம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட உள்ள பொருட்களை மார்ச்.12 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் 32 Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் பெற்ற சான்றிதழ்களுடன் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு எஸ்பி பிரசன்னகுமார் அறிவித்துள்ளார்.
News March 9, 2026
BREAKING மீண்டும் அரங்கேறிய நாங்குநேரி சம்பவம்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே போதை ஆசாமிகள் இரண்டு பேரை படுகொலை செய்த நிலையில் நேற்று வீரவநல்லூர் அருகே போதை ஆசாமிகள் விவசாயி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். வீரவநல்லூர் அருகே சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் நேற்று தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு வந்த போதைஆசாமிகள் அவரை வெட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
News March 9, 2026
நெல்லை மாவட்ட காவல்துறையினரின் விளக்கம்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் நெல்சன் என்பவர் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அவருடைய தாயார் இறந்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இது குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் வயது முதிர்வு காரணமாக நெல்சன் என்பவரின் தாயார் காலமானார் என்றும் எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் .


