News June 26, 2024
இபிஎஸ் உத்தமன் போல பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி

தமிழ்நாட்டில் பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருப்பதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக சிபிஐ விசாரணை கோருவது குறித்து பேட்டியளித்த அவர், இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இபிஎஸ் தான் ஒரு உத்தமன் போல தவறான தகவலை பரப்புவதாக அவர் சாடியுள்ளார்.
Similar News
News September 18, 2025
விஜய்யை எதிர்த்தால் திமுகவின் கைக்கூலியா? சீமான்

அனைத்து கட்சிகளையும் தான் பாரபட்சமின்றி விமர்சித்து வருவதாக சீமான் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், விஜய்யை எதிர்த்தால் திமுக கைக்கூலி, திமுகவை எதிர்த்தால் RSS கைக்கூலி என மாறி மாறி தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், திமுக தேர்தலில் தனித்து நிற்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 18, 2025
தள்ளிப்போகும் ரஜினி, கமல் படம்

ரஜினி, கமல் இணைந்து நடிக்கவுள்ள படம் மீதான எதிர்பார்ப்பே கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது. இந்நிலையில், ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ஆகியோரது இயக்கத்திலேயே கமல் முதலில் நடிக்கவுள்ளாராம். இதன்பிறகே கமல், ரஜினி இருவரும் நடிக்கும் படம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் இயக்குநர், சரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறவுள்ளதாம்.
News September 18, 2025
FLASH: ஏற்றத்தில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!

பங்குச்சந்தைகள் இன்று(செப்.18) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 83,013 புள்ளிகளிலும், நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 25,423 புள்ளிகளிலும் வர்த்தகத்தை முடித்துள்ளன. HDFC Bank, Infosys, Reliance, ICICI Bank, Maruti Suzuki உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE லாபம் தந்ததா?