News June 26, 2024

இபிஎஸ் உத்தமன் போல பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி

image

தமிழ்நாட்டில் பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருப்பதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக சிபிஐ விசாரணை கோருவது குறித்து பேட்டியளித்த அவர், இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இபிஎஸ் தான் ஒரு உத்தமன் போல தவறான தகவலை பரப்புவதாக அவர் சாடியுள்ளார்.

Similar News

News March 2, 2026

யானை நெருஞ்சில் மூலிகையின் பயன்கள்!

image

சிறுநீரக கல் உள்பட உடலின் பல பிரச்னைகளை யானை நெருஞ்சில் மூலிகை தீர்க்கும் என கூறப்படுகிறது. இதன் இலை, வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். யானை நெருஞ்சிலை வேருடன் பிடுங்கி 1 லிட்டர் நீரில் கொதிக்கவிட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி 50 மில்லி அளவில் வாரத்திற்கு 4-5 முறை குடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு நீங்குமாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல், பால்வினை தொற்றுகள் குணப்படுமாம்.

News March 2, 2026

மார்ச் 2: வரலாற்றில் இன்று

image

*1896–தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்தநாள் *1917–லாரி பேக்கர் பிறந்தநாள் *1918–நடிகர் ரஞ்சன் பிறந்தநாள் *1923–நடிகை சுந்தரிபாய் பிறந்தநாள் *1930–உப்பு சத்தியாகிரகத்திற்காக காந்தி, தண்டியை நோக்கி 240 மைல் நடைப்பயணத்தை தொடங்கினார் *1935–குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்தநாள் *1949-சரோஜினி நாயுடு நினைவு நாள் *1963–வித்யாசாகர் பிறந்தநாள் *1968–நடிகர் டேனியல் கிரெய்க் பிறந்தநாள்

News March 2, 2026

தர்மம் VS அதர்மத்திற்கான தேர்தல்: நயினார்

image

உதயநிதியை CM ஆக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சி நடத்துவதாக நயினார் விமர்சித்துள்ளார். NDA மாநாட்டில் பேசிய அவர், TN-ல் பெண்கள் யாருக்குமே பாதுகாப்பில்லை என்றும், புத்தகம் தூக்க வேண்டிய மாணவர்களின் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சியே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2026 தேர்தல் களமானது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல், இதில் தர்மமே வெல்ல வேண்டும் எனக் கூறினார்.

error: Content is protected !!