News June 26, 2024
திருச்சி கமிஷனர் அறிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 958 மனுக்கள் வந்தது. அதில் 876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 82 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
Similar News
News August 18, 2025
திருச்சிக்கு பக்கத்துல நம்பமுடியாத இடங்கள்?

திருச்சியில் மலைக்கோட்டை, கல்லணை ,ஸ்ரீ ரங்கம் கோயில் போன்ற இடங்களை தவிர நமக்கு தெரியாத பல இடங்கள் திருச்சியை சுற்றி இருக்குனு தெரியுமா?
✅முக்கொம்பு அணை,
✅பட்டாம்பூச்சி பூங்கா,
✅திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்,
✅அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்,
✅பச்சமலை மலைகள்,
✅புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,
நம்ம திருச்சிக்கு பக்கத்துல இப்படி பல இடங்கள் இருக்குனு தெரியாத நபர்களுக்கும் SHARE செய்து ஒரு Visit பண்ணுங்க!
News August 18, 2025
திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.
News August 17, 2025
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆக.15ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(20) என்பவர் சுற்றித்திரிந்தார், அப்போது அரை மீட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள காப்பகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.17) லட்சுமணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், லட்சுமணனை ஒப்படைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.