News June 26, 2024
திருச்சி கமிஷனர் அறிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 958 மனுக்கள் வந்தது. அதில் 876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 82 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
Similar News
News March 8, 2026
திருச்சி: கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் அறிந்துகொள்ளலாம். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை லால்குடியை சேர்ந்த மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
News March 7, 2026
திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் பயணிகள் ரயிலானது, வரும் மார்ச்.13, 15 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மேற்கண்ட தேதிகளில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
திருச்சி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


