News June 26, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
Similar News
News October 28, 2025
விஜய் புதிய அணுகுமுறையில் உள்ளார்: திருமாவளவன்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து வந்து விஜய் பார்த்திருப்பது, அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையாக உள்ளது என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் இடங்களுக்கு சென்று சந்தித்து, ஆறுதல் சொல்வதைத்தான் இவ்வளவு காலமாக நாம் பார்த்திருக்கிறோம், அதைத்தான் அரசியல் தலைவர்களும் பின்பற்றி வருகின்றனர் என்றும் திருமா குறிப்பிட்டார்.
News October 28, 2025
வின்னிங் கோச்சாக விரும்பவில்லை: கம்பீர்

நான் எப்போதும் வெற்றிகரமான பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை, இந்தியாவை பயமற்ற அணியாகவே உருவாக்க விரும்புகிறேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். ஹெட் கோச் கம்பீர் வழிகாட்டுதலில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, ஆஸி., உடனான ODI தொடரை இழந்தது. ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் ஆட்டத்தின் மீது முழுக் கவனத்தையும் செலுத்துவோம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.
News October 28, 2025
விஜய் வாய் திறப்பாரா? ரவிக்குமார் MP

SIR பணிகளை தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக மேற்கொள்ளும் வாக்குத் திருட்டு என்று தமிழகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் எதிர்க்கின்றனர் என விசிக MP ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பாஜகவை தனது கொள்கை எதிரி என கூறும் தவெகவும் இதனை எதிர்க்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வாய் திறப்பாரா என்றும் கேட்டுள்ளார். கரூர் துயருக்கு பிறகு சமூக பிரச்னைகளுக்கு தவெக குரல் கொடுக்கவில்லை.


