News June 26, 2024
ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த யெஸ் வங்கி!

நிர்வாக சீரமைப்பு, செலவினக் குறைப்பு ஆகிய காரணங்களுக்காக யெஸ் வங்கி தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. முறையற்ற வகையில் கடன் வழங்கியதால், திவால் நிலைக்கு சென்ற யெஸ் வங்கிக்கு எஸ்பிஐ வங்கி உதவிக்கரம் நீட்டி மீட்டெடுத்தது. இந்நிலையில், நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ள யெஸ் வங்கி, முதற்கட்டமாக 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
Similar News
News January 3, 2026
வங்கதேச வீரரை விடுவித்த KKR

BCCI அறிவுறுத்தியதன் அடிப்படையில், வங்கதேச வீரர் <<18750067>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR அணி விடுவித்துள்ளது. மாற்று வீரரை எடுத்துக் கொள்ளவும் அந்த அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஹ்மானை KKR ஏலத்தில் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அவரை விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
News January 3, 2026
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்றம் நடக்காது: சீமான்

TN-ஐ யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் TN-ல் எந்த மாற்றமும் நடக்காது என சவால் விடுத்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என திருமாவளவன் பேசுகிறார்; ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவரே அவர் தான் என்றும் கூறினார். உங்கள் கருத்து?
News January 3, 2026
₹500 நோட்டுகள் செல்லாதா?.. மத்திய அரசு CLARITY

2026 மார்ச் முதல் ₹500 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற தகவல்
SM-ல் பரவி வருகிறது. இந்நிலையில், ₹500 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்படும் என பரவும் செய்தி பொய்யானவை எனவும், இதுகுறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


