News June 26, 2024
பள்ளி மாணவி மயங்கி விழுந்து மரணம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகள் கனிஷ்கா ராசிபுரம் அரசுப் பள்ளியில் படித்து வந்தார். அவருக்கு சிறுவயது முதலே இதயக் கோளாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று காலை வகுப்பறையில் மயங்கி விழுந்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.
Similar News
News November 7, 2025
BREAKING: தவெக சின்னம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

தவெகவுக்கு பொது சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ECI-யை நாட விஜய் முடிவெடுத்துள்ளார். இதற்காக ஆதவ் அர்ஜுனா இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விசில், கிரிக்கெட் பேட், கப்பல், ஆட்டோ ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தவெக ECI-ல் மனு அளிக்க உள்ளது. இதில் தவெகவுக்கு ஏற்ற சின்னம் எது? உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News November 7, 2025
நிலைப்பாட்டை மாற்றிய EPS: செங்கோட்டையன்

தனது நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றியவர் EPS என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆட்சியை நடத்த தடுமாறியபோது OPS-ஐ அழைத்து வந்த EPS-தான், தற்போது அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார் எனவும், தான் CM-ஆக வழிவகை செய்த சசிகலாவையே கொச்சையாக பேசினார் என்றும் விமர்சித்துள்ளார். MP தேர்தலில் உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கே EPS சீட் வழங்கினார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 7, 2025
தெருநாய்கள் வழக்கு: அரசுக்கு கெடுபிடி! 1/2

*உள்ளாட்சி அமைப்புகள் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை செய்ய வேண்டும் *பிடித்த தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது *சாலைகளில் திரியும் விலங்குகளை அகற்ற நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க உத்தரவு *அனைத்து மாநில அரசுகளும் இதை உறுதியாக கடைபிடித்து, 8 வாரங்களுக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.


