News June 26, 2024
முதல்வர் தவறான தகவலை தெரிவித்தாரா?

மாநில அரசுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை எனக் கூறி பிஹாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்ததாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த தகவலை பாமக தலைவர் அன்புமணி மறுதலித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உண்மையில் கணக்கெடுப்பில் இருந்து இடஒதுக்கீட்டில் தவறான தகவலை பிஹார் அரசு குறிப்பிட்டதால் அது ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தார்.
Similar News
News March 2, 2026
வங்கிக் கணக்கில் ரூ.2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
News March 2, 2026
பெரிதாகும் போர்.. ஈரானுடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
News March 2, 2026
ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக அரசு: EPS

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறும் நிலையில், அதை EPS மறுத்துள்ளார். மோடி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு பிரசாரத்தை திமுக பரப்புவதாக சாடிய EPS, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும் விமர்சித்தார்.


