News June 26, 2024
செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க அவகாசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை முடிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க பிப்ரவரியில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News March 2, 2026
நாளை சந்திர கிரகணம்.. இதெல்லாம் செய்யக் கூடாது!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, <<19280134>>சந்திர கிரகணத்தின்போது<<>> வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லக் கூடாது. கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது. மேலும், கிரகணம் முடிந்த பிறகு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டுமாம். அதன்படி, வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். மேலும், கோயிலுக்குச் சென்று தீர்த்தம் வாங்கி வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். SHARE IT.
News March 2, 2026
PM அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?

இஸ்ரேல் PM நெதன்யாகுவின் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் IRGC படை தெரிவித்துள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த நேரத்தில் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா, அவரது உயிருக்கு ஆபத்து நேர்ந்ததா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேபோல் இஸ்ரேலிய விமானப்படை தளபதியின் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
News March 2, 2026
கார் விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் பலி UPDATE

<<19278785>>கார் விபத்தில் <<>>தனது டிரைவர் முத்து உயிரிழந்தது தொடர்பாக நடிகை தேவிப் பிரியா உருக்கமாக பேசியுள்ளார். முத்து தனக்கு அம்மா மற்றும் தம்பி போன்று இருந்ததாகவும் 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்ததாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். ஷூட்டிங்கிற்காக தேனிக்கு சென்று கொண்டிருந்தபோது கார் டயர் பஞ்சரானதாக கூறிய அவர், அப்போது நிறுத்தி வைத்த தனது கார் மீது மற்றொரு கார் மோதியதாக தேவிப் பிரியா தெரிவித்துள்ளார்.


