News June 26, 2024
செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க அவகாசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை முடிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க பிப்ரவரியில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News September 18, 2025
நேபாள சூழலை இந்தியாவில் உருவாக்க ராகுல் முயற்சி: பாஜக

ராகுல் காந்தி சுமத்தும் <<17748314>>வாக்கு திருட்டு <<>>குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அனுராக் தாக்குர் கூறியுள்ளார். ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவதன் மூலம் வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமையை இந்தியாவிலும் ராகுல் உருவாக்க முயற்சிப்பதாக அவர் சாடியுள்ளார். மேலும், தேர்தல் தோல்வி எதிரொலியாக விரக்தியில் பேசும் ராகுல், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
நேபாளத்துக்கு இந்தியா உதவும்: PM மோடி

நேபாள இடைக்கால பிரதமர் சுசிலா கார்கியுடன், PM மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த மோடி, நேபாளத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கும், நிலைத்தன்மை உண்டாவதற்கும் தேவையான ஆதரவை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளார். முன்னதாக, SM-களுக்கு தடை, ஊழலுக்கு எதிர்ப்பு ஆகியவற்றிற்காக Gen Z தலைமுறையினர் போராட்டம் நடத்தினர்.
News September 18, 2025
மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்.. HEALTH UPDATE

நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.