News June 26, 2024
காஞ்சியில் 40% ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யப்படுகிறது

இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் உற்பத்தியில், 40% காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், அமெரிக்காவின் கார்னிங் நிறுவனத்துடன் ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம் இணைந்து போன் சாதனங்களுக்கான உயர்தர கண்ணாடி பாகங்கள் உற்பத்தி செய்யவுள்ளன. இதற்காக காஞ்சிபுரத்தில் ₹1,003 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதெனக் கூறினார்.
Similar News
News March 4, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
News March 4, 2026
நடிகர் ரஜினிகாந்த் வழக்கு.. பரபரப்பு உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான கட்டடத்தை ரஜினிகாந்த் குத்தகைக்கு விட்டிருந்தார். இந்த இடத்துக்கு வரி செலுத்தும்படி, ரஜினிக்கு சேவை வரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ரஜினி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், விசாரணையின் முடிவில், சேவை வரித்துறை விதித்த வரியை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
News March 4, 2026
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே திமுகவுக்கு உள்ள 4 இடங்களில் காங்., & தேமுதிகவுக்கு தலா 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜ்யசபா தேர்தல் மார்ச் 16-ல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு உள்ள 2 சீட்களில் யார் போட்டியிடவுள்ளனர் என்பது பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை.


