News June 26, 2024
தஞ்சாவூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்த நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் ஆகியவற்றிற்கு (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் விருது பெற http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News March 1, 2026
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News March 1, 2026
தஞ்சை பெரிய கோயில் நடை மூடல்

தஞ்சை பெரிய கோயிலின் நடை வரும் 3ம் தேதி அன்று சந்திர கிரகணத்தை காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 7.30 மணிக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் வழிபாட்டிற்காக நடை திறக்கப்படும் என்று தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
தஞ்சை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


