News June 26, 2024

சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக இல்லை: இபிஎஸ்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை பேரவையில் உடனே விவாதிக்க வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அப்பாவு அரசியல் பேசுவது நல்லதல்ல என்றார். மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவும் அரசியல் பேசலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.

Similar News

News September 18, 2025

கவினை ஆணவக்கொலையை குடும்பமே திட்டமிட்டது: CB-CID

image

கவின் ஆணவக்கொலையில் காதலியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் CB-CID தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கவினை சுர்ஜித் கொலை செய்தது தனது பெற்றோருக்கு தெரியாது என பெண் கூறியிருந்தார். ஆனால் தற்போது, சுபாஷினியின் காதல் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்பதால் கவினை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக CB-CID கூறியதால், பெண்ணின் தந்தை SI சரவணனின் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது.

News September 18, 2025

BREAKING: மீண்டும் கூட்டணியில் TTV, OPS.. இபிஎஸ் சம்மதம்

image

அமித்ஷா – EPS சந்திப்பு குறித்து புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! NDA கூட்டணியில் மட்டும் TTV, OPS, சசிகலாவை சேர்க்க EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷா கூறியதை அடுத்து, EPS ஓகே சொல்லி இருக்கிறாராம். இதனால், பாஜக தேசிய தலைமை மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.

News September 18, 2025

முகம் பளிச்சிட இந்த தேநீரை குடிங்க!

image

ரோஜா இதழ்களை பறித்து, நன்கு உலர்த்தி கொள்ளவும் *உலர்ந்த இந்த ரோஜா இதழ்களை, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும் *3- 5 நிமிடங்கள் வரை இந்த நீரை கொதிக்க வைத்துவிட்டு, இறக்கி வடிகட்டவும் *பிறகு இதில், தேயிலைத் தூளைச் சேர்க்கவும் *இதில் தேன் கலந்தால், சுவையான, ஹெல்தியான ரோஸ் டீ ரெடி. இதனை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!