News June 26, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

தூத்துக்குடி: ரேஷன் கடைக்கு போக வேண்டாம்! இந்த நம்பர் போதும்!

image

தூத்துக்குடி மாவட்ட மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News March 10, 2026

தூத்துக்குடி: பெண்களுக்கு பாதுகாப்பில்லை – சௌமியா

image

தூத்துக்குடி விமான நிலையத்தில் சௌமியா அன்புமணி (பாமக) செய்தியார்களை சந்தித்தார். அதில், பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு பெரியவர்கள் தான் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது சிறுவர்கள் கூட இக்குற்றத்தில் ஈடுபடும் அவலநிலை நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.

News March 10, 2026

தூத்துக்குடி: மருமகனை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள்

image

தூத்துக்குடி கே வி கே சாமி நகரை சேர்ந்தவர் ஹரிகுமார். இவரை கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணா நகரை சேர்ந்த இவரது மாமா சுப்பிரமணியன் சத்தியநாராயணன் என்பவருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் சத்யநாராயணனை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!