News June 26, 2024
கள்ளக்குறிச்சி: உயிரிழப்பு 61 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

கள்ளக்குறிச்சி மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு <
News December 24, 2025
கள்ளக்குறிச்சியில் 2 லட்சம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்படுத்தும் திட்டத்தில் வரும் டிச.29ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 250 கால்நடைகள் மற்றும் திருக்கோவிலுார் கோட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 400 கால்நடைகள் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 650 கால்நடைகள் உள்ளன என்றும் மாவட்ட நிர்வாகம் தகவல்.
News December 24, 2025
கள்ளக்குறிச்சியில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

கள்ளக்குறிச்சி: புதுப்பாலப்பட்டு செல்லும் சாலையில் 3 பள்ளிகள் உள்ளன. நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, 1 மாணவி மற்றும் 3 மாணவர்களை அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் 4 பேரும் காயமடைந்துள்ளனர். சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


