News June 26, 2024
தமிழக அரசின் உத்தரவுக்கு தடை

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிமாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டு சுரேஷ்குமார் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்ததோடு, இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 12-க்கு ஒத்திவைத்தது.
Similar News
News September 18, 2025
கூட்டணியா? சற்றுநேரத்தில் மனம் திறக்கிறார் இபிஎஸ்

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து EPS இன்று விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, TTV உள்ளிட்டோரை NDA கூட்டணியில் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கலாம். அவரின் செய்தியாளர் சந்திப்புக்கு பின்புதான், கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News September 18, 2025
மீண்டும் தள்ளிப்போகிறதா தனி ஒருவன்-2?

தனி ஒருவன்-2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனி ஒருவன்-1 ஐ தயாரித்த AGS நிறுவனத்திடமே 2-ம் பாகத்திற்கான கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஆனால் அர்ச்சனா கல்பாத்தியோ, இது சரியான நேரமில்லை என கூறியிருக்கிறார். தனி ஒருவன்-1 வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2ம் பாகம் வருவது டவுட்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
News September 18, 2025
RECIPE: ஹெல்தியான மாப்பிள்ளை சம்பா லட்டு!

மாப்பிள்ளை சம்பாவில் துத்தநாகம், நார்ச்சத்து இருப்பதால், நரம்பு மண்டலத்தை வலுப்பெற செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா மிகவும் நல்லது என கூறப்படுகிறது.
*மாப்பிள்ளை சம்பா அரிசியை மிதமான தீயில், நன்கு வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
*இதில், பொடித்த வெல்லம் & ஏலக்காய் தூள் &நெய் சேர்த்து, லட்டு பிடித்தால், மாப்பிள்ளை சம்பா லட்டு ரெடி. SHARE.