News June 26, 2024

தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண்

image

லண்டனில் இந்திய வம்சாவளி சீமா மிஸ்ரா, தான் பணிபுரிந்த தபால் நிலையத்தில் பணத்தை திருடியதாக கூறி, 12 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பமாக இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் நிரபராதி எனவும், தவறாக தண்டிக்கப்பட்டார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், மிஷ்ரா மீது குற்றம்சாட்டிய நபர், மன்னிப்பு கோரி எழுத்துப்பூர்வ சாட்சி அறிக்கையை அளித்துள்ளார். ஆனால் மன்னிப்பை அவர் நிராகரித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை: ஃபரூக்

image

தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மயிரிழையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் அமித் ஷா போனில் தன்னை தொடர்புகொண்டு விசாரித்ததாக கூறினார். தற்போது நாட்டில் நிலவும் வெறுப்பு பிரசாரத்தால் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

News March 13, 2026

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது. *சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும். *வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தால், தோல்வி ஒருபோதும் வெல்லாது. *பெரிய கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் உயர்ந்த நிலையை அடையும். *வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

News March 13, 2026

கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டாரா?

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய உயர் தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பெற்ற நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரானின் ‘ஃபார்ஸ்’ ஊடகம், அவருடன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!