News June 26, 2024
சூரஜ் மீது 2ஆவது பாலியல் வழக்கு

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா மீது 2ஆவது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது கட்சி நிர்வாகியை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த திங்கள் கிழமை 8 நாள்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.
Similar News
News March 15, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவகம் மவுசு அதிகரிப்பு

வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் சில ஹோட்டல்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களிலுள்ள அம்மா உணவகங்களில் 25 – 50% வரை வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், இங்கு கேஸ் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
News March 15, 2026
விஜய்க்காக காத்திருக்கிறாரா இபிஎஸ்?

விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக, இதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து EPS பேசவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையில், இளம், நடுத்தர வயது வாக்காளர்கள் திமுகவை விட தவெகவிற்கே அதிகம், இத்தேர்தலில் விஜய் கிங் மேக்கராக இருப்பார் என நேற்று வெளியான IPDS கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. தற்போது விஜய் டெல்லியில் இருக்கும் சூழலில் 80 தொகுதி ஆஃபருடன் ADMK கூட்டணியில் TVK இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
பெண் போலீஸ் பலாத்காரம் .. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

கோவையில் 45 வயதான பெண் காலவரை, உயர் அதிகாரியே பலாத்காரம் செய்தது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. பெண் உயர் அதிகாரி, காலவரை தனியாக விட்டு சென்ற நிலையில், அலுவலக அறையிலேயே வைத்து சிறப்பு காவல்படையில் SP அந்தஸ்தில் இருக்கும் செந்தில்குமார் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார். இதுதொடர்பான புகாரில் அவரை போலீசார் கைது செய்தனர்.


