News June 25, 2024

சீர்மரபினருக்கான உதவித்தொகை உயர்வு

image

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, இயற்கை மரணத்திற்கு ₹30,000ஆகவும், விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு ₹1,25,000ஆகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. மேலும், ₹2.94 கோடியில் 693 பி.சி, எம்.பி.சி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளுக்கு DTH இணைப்புகளுடன் LED தொலைக்காட்சி வழங்கப்படவுள்ளது.

Similar News

News March 11, 2026

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

image

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS

News March 11, 2026

TN-ல் பணியாற்றிய காலம் பொற்காலம்: RN ரவி

image

மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்ட ரவி TN மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 54 மாதங்கள், TN மக்களோடு கலந்து பழகி, அவர்களின் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்ததாக கூறிய அவர், இப்போது TN மக்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், TN-ல் செலவிட்ட இந்த நாள்கள், தன் வாழ்வின் பொற்கால நாள்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. அரசியலில் பரபரப்பு மாற்றம்!

image

தமிழக தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி அமைக்காத ராமதாஸ், சசிகலா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், திமுக, அதிமுக இல்லாத விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு, வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு களமிறங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!