News June 25, 2024

கள்ளக்குறிச்சி: 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்ததை அடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை, தம்புரான்பட்டு, கழுகுமலை பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

இன்று SL vs AFG: சூப்பர் 4-க்கு தகுதி பெறப்போவது யார்?

image

ஆசிய கோப்பை தொடரில் இன்று SL vs AFG அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகும் என்பதால், ஆஃப்கன் கடுமையாக போராடும். அதேவேளையில், தோல்வியை தவிர்க்க இலங்கை முயற்சிக்கும். ஆஃப்கன் இதுவரை 2 போட்டிகளில் ஒன்றிலும், இலங்கை இரண்டிலும் (NRR 1.54) வென்றுள்ளது. ஒருவேளை ஆஃப்கன் அணி தோற்றால், வங்கதேச அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.

News September 18, 2025

நடிகர் ரோபோ சங்கர் ICU-க்கு மாற்றம்

image

நேற்றைய படப்பிடிப்பின் போது <<17736001>>ரோபோ சங்கர் <<>>திடீரென மயங்கி விழுந்ததால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல குணமாகி வந்த நிலையில், தற்போது இப்படி ஏற்பட்டுள்ளது.

News September 18, 2025

இனி பாக்.,-ஐ தொட்டால் சவுதி வரும்!

image

பாகிஸ்தான் – சவுதி இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய 9 நாள்களில், இந்தியா – பாக்., போர் நடந்த சில நாள்களில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது பொதுவான தாக்குதலாக கருதப்பட்டு எதிர் தாக்குதல் நடத்தப்படும். இருப்பினும் இந்தியா உடனான உறவு அப்படியே நீடிக்கும் என்று சவுதி கூறியுள்ளது.

error: Content is protected !!