News June 25, 2024
மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை: TTV தினகரன்

EPS, CM வேட்பாளராக இருக்கும் வரை ADMK அங்கம் வகிக்கும் NDA-வுடன் கூட்டணி இல்லை என TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் AMMK இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி வாகை சூடும் என ஆருடம் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி விஜய் பிரசாரம் செய்வதாக கூறப்படுவது தங்களது கட்சியினருக்கு பெருமை என்றார். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 15, 2025
தாய்மையை தலைநிமிர வைத்த ஜுவாலா குட்டா

தன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மார்பமுதாய் வழங்கி, நோயெதிர்ப்பு கொண்ட குழந்தையாக மாற்றும் வல்லமை கொண்டவள் பெண். அந்த அமுதம், தன் குழந்தைக்காக மட்டுமல்லாது, அதற்காக காத்திருக்கும் பல குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார் ஜுவாலா குட்டா. கிட்டத்தட்ட 30 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கி உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், விஷ்ணு விஷாலின் மனைவி ஆவார்.
News September 15, 2025
உலகின் விசித்திரமான இயற்கை அதிசயங்கள்

இயற்கையை விட சிறந்த படைப்பாளி, சிறந்த ஓவியர், சிறந்த டிசைனர் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், நிலத்தோற்றங்களும் இதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி, காட்சியளிக்கும் இடங்கள் சிலவற்றை மேலே உள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். swipe செய்து பாருங்கள். இதுபோல வேறு இடங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.