News June 25, 2024
கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத் பதவியேற்பு

கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஷ்ணு பிரசாத், கடலூர் மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News March 8, 2026
கடலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சித்தேரியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் முன்னிலையில், நேற்று (மார்ச் 7) மாற்றுக்கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
கடலூர்: பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஊக்கத்தொகை

கடலூர் மாவட்டத்தில் 264 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் 3 மாத காலத்திற்கு மட்டும் லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE
News March 8, 2026
கடலூர்: ரூ.1.11 கோடி மோசடி – குற்றவாளி கைது

களையூர் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (36) என்பவரிடம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ.36 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பலரிடம் ரூ.1.11 பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!


