News June 25, 2024

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

image

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஐ வேட்பாளர் செல்வராஜ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வராஜ் நாகை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News November 7, 2025

திருவாரூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 7, 2025

திருவாரூர் அருகே அரசு மருத்துவமனையில் ரகளை

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விமலநாதன் (23) என்ற வாலிபர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக கடும் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை விமலநாதன் ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட விமலநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 7, 2025

திருவாரூர்: பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை!

image

எரவாஞ்சேரி பகுதியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்த லலிதா, அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் லலிதாவிற்கு போக்கோ சட்டத்தின் கீழ் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

error: Content is protected !!