News June 25, 2024
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பதவியேற்றார்

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதிக்கு, தமிழச்சி தங்கப்பாண்டியன் 2வது முறையாக எம்.பி-யாக பதவியேற்றுள்ளார்.
Similar News
News December 30, 2025
நீச்சல் குளங்களில் குளிக்க தடை விதிப்பு!

சென்னை ஈசிஆர் சாலை பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல், விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிச.31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
News December 30, 2025
சென்னை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News December 30, 2025
சென்னை: குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்


