News June 25, 2024

நெல்லை – கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

image

நெல்லை-கொல்லம் இடையே மீட்டர்கேஜ் பாதை இருந்தபோது காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அகல பாதையாக மாற்றப்பட்ட பின் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் நெல்லை, கொல்லம் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News September 14, 2025

நெல்லையில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் அறுவடைத் தொடங்கிய விவசாயிகளுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 35 நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அம்பை-12, சேரன்மாதேவி-12, பாளையங்கோட்டை-7, நாங்குநேரி-2, நெல்லை-1, மானூர்-1 என அமைந்துள்ளன. சன்னரக நெல் குவிண்டுக்கு ரூ.2,545 பொதுரகத்துக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். *ஷேர்

News September 14, 2025

நெல்லை: இறந்த நிலையில் பெண் உடல்

image

பாளை -சீவலப்பேரி மெயின் ரோட்டில் கொம்பந்தானுர் ஊருக்கு மேல்புறம் இசக்கியம்மன் கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்தார். இதுக்குறித்து பாளை தாலுகா போலீசார் பெண் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண் கருப்பு நிறம் பூ போட்ட நைட்டி அணிந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News September 14, 2025

நெல்லை: ஆசிரியர் மீது மாணவனின் தாய் போலீசில் புகார்

image

நெல்லை, ஏர்வாடியைச் சேர்ந்த மாணவர், வள்ளியூரில் உள்ள கெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். வகுப்பில் பேசியதாக கூறி ஆசிரியை சுபாஷினி அவரை பிரம்பால் தாக்க, அவர் காயமடைந்தார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணவனின் தாய் நீதிக்காக போராடுவோம் என்றார். மாவட்ட கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்த உத்தரவு பெற்றுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!