News June 25, 2024
ராம்நாடு: திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் மேகலா (25). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 2வது கணவர் மணிகண்டன் போதையில் ஜூன் 23ல் கொலை செய்தார். இந்நிலையில் நேற்று எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை, அதிமுக, திமுக, பாஜக, விசிக, காங், மக்கள் நீதி மய்யம், சிபிஎம், சிபிஐ, ஓபிஎஸ் அணி, இந்து முன்னணி உட்பட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு 2 குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்குமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Similar News
News September 5, 2025
ராம்நாடு: நம்ம ஊரில் அரசு வேலை.. நேரில் செல்லுங்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108, 102 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான நேர்காணல் R.S.மங்களம் (சனி), பார்திபனூர் (ஞாயிறு) ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் சான்றிதழ்களுடன் நேரில் செல்லலாம். சம்பளம் ரூ.21,000. மேலும் தகவலுக்கு 8925941097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News September 5, 2025
இராமநாதபுரம்: மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த அஜீஸ்பாய் தமிழர் அதிகாரம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழர் அதிகாரம் கட்சியின் தலைவர் அழகர் சாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில கொள்கை பரப்பு செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 4, 2025
இராமநாதபுரம்: ரயில் சேவையில் மாற்றம்

ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது அதிவிரைவு ரயில் (வ.எண்கள்: 22662/ 22661) & போட் மெயில் (வ.எண்கள்: 16752/16751) விரைவு ரயில் 10.9.2025 முதல் 11.9.2025 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும். எழும்பூர் ரயில் நிலையம் செல்லாது என தெற்கு ரயில்வே சென்னை போக்குவரத்து தலைமையகம் அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க