News June 25, 2024
ஏன் புறக்கணிப்பு என்று தெரியவில்லை: சபாநாயகர்

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் பதிவேற்றப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை அதிமுகவினர் வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக கூறிய அவர், ஏன் புறக்கணிக்கின்றனர் என்பதே தெரியவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். கேள்வி நேரத்தைதான் முதலில் நடத்த வேண்டும் என்ற சட்டப்பேரவை விதியையும் அவர் சுட்டிக் காட்டினார்.
Similar News
News September 17, 2025
இபிஎஸ் சரணடைந்து விட்டார்: ஸ்டாலின்

திமுக முப்பெரும் விழாவில், EPS-ஐ CM ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அண்ணாயிசமாக இருந்த அதிமுகவின் கொள்கை, அடிமையிசமாக மாறி, அமித்ஷாவே சரணம் என EPS சரணடைந்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள் என்ற அவர், காலிலேயே விழுந்த பிறகு கர்சீப் எதற்கு என்றுதான் இப்போது பலர் கேட்பதாக, அமித்ஷா – EPS சந்திப்பை சாடியுள்ளார்.
News September 17, 2025
இந்தியாவின் வியர்வையும் வாசமும் இருக்கணும்: மோடி

வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ அடைவதற்கு சுயசார்பு இந்தியா ஒரு முக்கிய பாதையை அமைத்து கொடுக்கும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். இது பண்டிகை காலம் என்பதால், Made in India பொருள்களை வாங்க வேண்டும் என்று 140 கோடி இந்தியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் ஒரு இந்தியரின் வியர்வையும், நம் மண் வாசமும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News September 17, 2025
Beauty Tips: கழுத்தில் உள்ள கருமையை சிம்பிளா நீக்கலாம்

➤பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் கழுத்தில் உள்ள கருமை அகலும். ➤பட்டை பொடியில், தேன் கலந்து கழுத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதன் மூலம் கழுத்திலுள்ள கருமை நீங்குவதோடு தழும்புகள் மறையும். SHARE.