News June 25, 2024

தென்காசி: ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையம் நாளை (ஜூன் 26) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (3 மணி நேரம் கூடுதலாக) செயல்படும் என்றும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News July 10, 2025

தென்காசி விவசாயிகளே: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

image

தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த மானியத்தில் 40% மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகின்றன. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உழவன் செயலி (Ulavan App) வழியாக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.மேலும் விரிவான தகவல்களைப் பெற, தென்காசி மாவட்டத்திலுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News July 10, 2025

குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்

image

தென்காசி மாவட்டத்தில் மிகவும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் குளித்து மகிழ்கின்றனர். மேலும் வருடத்திற்கு ஒருமுறை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த வருடத்திற்கான சாரல் திருவிழா வருகின்ற ஜூலை 19ம் தேதி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

தென்காசியில் ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

image

மாநில அளவில் 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் ரூ.1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்துடன், ஆவணங்களை https://tinyurl.com/Panchayataward தகுதியான ஊராட்சிகள் (or) https://cms.tn.gov.in/cms migrated/document/forms/Samooga Nallinakka Ooraatchi Award Application.pdf பதிவிறக்கலாம். *SHARE IT

error: Content is protected !!