News June 25, 2024

கள்ளச்சாராயம் விற்ற அதிமுகவை சேர்ந்தவர் கைது

image

கள்ளச்சாராயம் விற்றதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சுரேஷ்குமார் என்பவரும் ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக முன்னாள் விவசாய பிரிவு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்துள்ளார். இவர் மீது நீண்ட காலமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News July 10, 2025

உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுவதற்கான “உயர்கல்வி வழிகாட்டித் திட்டக் கட்டுப்பாட்டு அறை” மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், 30.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

News July 10, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

News July 10, 2025

ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.07.2025) மாலை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டச் செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் அரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!