News June 24, 2024
வானூர் அருகே திடீரென தீ பற்றிய கார்

வானூர் அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் முத்துவேல் வேலை சம்பந்தமாக இன்று பிரம்மதேசம் அருகே உள்ள வங்காரம் கிராமத்திற்கு காரில் சென்றுள்ளார். வங்காரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வெளிவந்து கார் தீப்பிடித்து எறிய தொடங்கியது. பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
Similar News
News August 24, 2025
விழுப்புரம் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 7 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 3 நகராட்சி
▶️ 7 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 9 வட்டங்கள்
▶️ 929 வருவாய் கிராமங்கள்
▶️ 688 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 13 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News August 24, 2025
திண்டிவனம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

திண்டிவனம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று நகராட்சி பொறியாளர் சரோஜா முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
News August 24, 2025
விழுப்புரம் காவல்துறை சார்பில் பதிவு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிவோம் பாதுகாப்பை உறுதி செய்வோம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.