News June 24, 2024

ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியதில், இதுவரை 57 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அண்ணாமலை, அது தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் நேரில் சென்று அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 14, 2025

பத்தே நிமிடங்களில் நிகழ்ந்த பேரதிர்ச்சி

image

உங்களுக்கு மெசேஜ் செய்த ஒருவர், அடுத்த 10-வது நிமிடத்தில் உயிருடனே இல்லை என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இது நிஜ வாழ்விலும் நடந்துள்ளது. சரியாக காலை 8:37 மணிக்கு ஊழியர் லீவ் கேட்க, மேனேஜரும் அப்ரூவ் கொடுத்துள்ளார். சரியாக 8:47 மணிக்கு ஊழியர் மாரடைப்பால் இறந்துள்ளார் என்ற துயரச் செய்தியே வந்துள்ளது. ஆனால், அவருக்கு புகை பிடித்தல், மது குடித்தல் என்ற எந்த பழக்கமும் இல்லையாம். So Sad..

News September 14, 2025

BREAKING: நாடு முழுவதும் இந்த வங்கி சேவை முடங்கியது

image

HDFC வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால், வாடிக்கையாளர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பி வருகின்றனர். வங்கி சேவை மட்டுமின்றி, UPI பரிவர்த்தனையும் தடைப்பட்டுள்ளது. வார விடுமுறை நாளான இன்று, காலையிலேயே Server Down என்பதால், கடைகளுக்கு சென்ற பலரும் UPI-ல் பணம் செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு வேலை செய்யுதா HDFC சேவைகள்?

News September 14, 2025

IND vs PAK: அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா?

image

பும்ரா, அக்‌ஷர், வருண், குல்தீப் ஆகிய மெயின் பவுலர்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-ல் உள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பாக்.,க்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஏற்கெனவே உள்ள பிளேயிங் 11-ல் எந்த மாற்றமும் இல்லை என்று துணை கோச் ரயான் டென் டெஸ்கொத்தே கூறியுள்ளார். எனவே காயமடைந்துள்ள கில்லும் விளையாடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது.

error: Content is protected !!