News June 24, 2024

கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94441-34000, 94442-12749, மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்.82489-86885 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News September 9, 2025

துணை முதலமைச்சருக்கு சால்வை அணிவித்த காஞ்சி எம்எல்ஏ

image

காஞ்சிபுரம், செவிலிமேடு அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள இன்று (செப்.,9) வருகை தந்தார். துணை முதலமைச்சரை காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News September 9, 2025

காஞ்சியில் திமுக நிர்வாகிகளை சந்திக்கும் துணை முதல்வர்!

image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.,8) காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.

News September 9, 2025

BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி-யை விடுதலை செய்ய உத்தரவு!

image

காஞ்சி டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரை சிறையில் அடைக்க காஞ்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.,9) உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!