News June 24, 2024

முதல்வரின் செயலாளர் என கூறி ஏமாற்ற முயற்சி

image

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலாளர் என கூறி, அரசு உயர் அதிகாரிகளிடம் ஏமாற்ற முயன்ற பண்டு சவுத்ரி என்கிற விவேக் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகளிடம் ஏமாற்றும் நோக்கத்தில் போன் செய்து பேசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக, இவர் மீது பல்ராம்பூர், மதுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Similar News

News September 14, 2025

கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

image

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.

News September 14, 2025

பெற்றோர்களே, இதை கவனிங்க

image

பெற்றோர்களே இந்த விஷயங்களையும் கவனியுங்கள்: *குழந்தைக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், தட்டுகளில் உணவை கொடுத்து பழக்கவும் *தண்ணீர் பாட்டிலை ஸ்டீல் (அ) காப்பரில் வாங்கலாம். வாய் சிறிதான பாட்டில் நல்லது. *பணிக்கு செல்லும் பெற்றோர் ஞாயிறன்று முழு நேரத்தையும் குழந்தையுடன் செலவழியுங்கள் *வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது நல்லது; பாதுகாப்பும் கூட *பிடிக்காத விஷயத்தை செய்ய வற்புறுத்தாதீர்.

News September 14, 2025

நான்கு நாள்களுக்கு கனமழை பெய்யும் : IMD

image

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி காரணமாக 16-ம் தேதி வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், TV.மலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 17-ம் தேதி 8 மாவட்டங்களிலும், 18-ம் தேதி 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று IMD கூறியுள்ளது. 19-ம் தேதி வரை கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!