News June 24, 2024
தாயே மகளை புதைத்த கொடூரம்

டெல்லியை சேர்ந்த தாஹீர், சவுதியில் வேலை செய்து வருகிறார். அவர், தனது மகள் பர்வீனாவை (17) காணவில்லை என மின்னஞ்சல் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், தாயே மகளை புதைத்தது தெரியவந்துள்ளது. தான் கொலை செய்யவில்லை எனவும், மகள் தற்கொலை செய்து கொண்டதால் புதைத்ததாகவும் தாய் அனிதா பேகம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
பெரியார் பொன்மொழிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. *பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. *தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும். *ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அதேபோல் மற்றவர்களிடமும் அவன் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். *கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
News September 17, 2025
USA வர்த்தக பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

<<17712326>>இந்தியா – அமெரிக்கா<<>> இடையே நேற்று நடந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்கும் பலனளிக்கும் விதமாக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என இருநாடுகளும் விரும்புவதாகவும் கூறியுள்ளது. வேளாண் மற்றும் பால்பண்ணை துறைக்கான சந்தையை அமெரிக்காவிற்கு திறக்க சில நெகிழ்வுத்தன்மைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 17, 2025
ஒரு முஸ்லிம் நாட்டை தொட்டால் 40 நாடுகள் வரும்!

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவில் துருக்கி, பாக்., உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தின. அதில், வெளிப்புற தாக்குதல்களை எதிர்கொள்ள, ஐரோப்பிய நாடுகளின் NATO அமைப்பை போல், முஸ்லிம் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பை உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த 2015-லேயே இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.