News June 23, 2024
இரவில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

தமிழகத்தில் இரவு 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
ஒரு முஸ்லிம் நாட்டை தொட்டால் 40 நாடுகள் வரும்!

கத்தாரில் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தலைநகர் தோஹாவில் துருக்கி, பாக்., உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தின. அதில், வெளிப்புற தாக்குதல்களை எதிர்கொள்ள, ஐரோப்பிய நாடுகளின் NATO அமைப்பை போல், முஸ்லிம் நாடுகளும் ராணுவ கூட்டமைப்பை உருவாக்குவது என முன்மொழியப்பட்டுள்ளது. கடந்த 2015-லேயே இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
SKY-ஐ பன்றி என விமர்சித்த விவகாரம்: புது விளக்கம்

<<17731873>>சூர்யகுமார் யாதவ்<<>>வை பன்றி என முன்னாள் பாக்., வீரர் முகமது யூசஃப் விமர்சித்தது சர்ச்சையானது. ஆனால், நாட்டிற்காக விளையாடும் உறுதிமிக்க வீரர்களை மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்பது தனது உள்நோக்கம் அல்ல என யூசஃப் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அஃப்ரிடியை நாய் குரைப்பதாக பதான் விமர்சித்த போது இந்திய மக்கள் எங்கே போனார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 461 ▶குறள்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். ▶பொருள்: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.