News June 23, 2024

திருப்பூர் அருகே 17 பேர் அதிரடி கைது

image

திருப்பூர் மாவட்டம், ஊதியூர் சுள்ளிக்காட்டு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடப்பதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர், காங்கேயம், பல்லடம், குண்டடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 17 பேரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 சண்டை சேவல்கள், ரொக்கம் ரூ. 20 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில், இன்று 05.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம், இப்பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் .அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News November 5, 2025

திருப்பூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

image

திருப்பூர் அரிசி கடைவீதியைச் சேர்ந்த நந்தினி. கடந்த 4 மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். ராமமூர்த்தியின் செயல்பாடு பிடிக்காததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று ராமமூர்த்தி பேச மறுத்த நந்தினியை பின் தொடர்ந்து வீட்டிற்குச் சென்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

News November 5, 2025

திருப்பூர்: ரயில்வே வேலை! APPLY NOW

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.25,500-ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!