News June 23, 2024
மறுதேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை

இன்று 1,563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், இத்தேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் அனைவருக்கும் இன்று மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
Similar News
News September 17, 2025
PM மோடிக்கு நண்பர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து

PM மோடிக்கு தொலைபேசி மூலம் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து PM தனது X பக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்பிற்கு நன்றி எனவும், உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். வரிவிதிப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
ஜெயிலர் 2 படத்தின் டபுள் அப்டேட்

உண்மையிலேயே ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க தான் ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள நெல்சன், இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், இதற்கு மேல் சொல்லி ஹைப் ஏற்ற விரும்பவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் ‘கூலி’ படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
POSH சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது: SC

பணியிடங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தடை சட்டத்தை (POSH), அரசியல் கட்சிகளில் உள்ள பெண்களுக்கும் பொருந்துமாறு உத்தரவு பிறப்பிக்க கோரி SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சம்பளம் இல்லாமல் விருப்பத்தின் பேரில் சேரும் அரசியல் கட்சியை எப்படி பணியிடமாக கருத முடியும் என்று SC கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் POSH சட்டம் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாது என கூறி தள்ளுபடி செய்துள்ளது.