News June 23, 2024
கள்ளக்குறிச்சி காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற பேர் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. 7 பேர் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் நலமாக உள்ளதாகவும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
News July 10, 2025
ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.07.2025) மாலை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டச் செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் அரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
News July 10, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09.07.2025) இரவு 10 மணி முதல், நாளை வியாழக்கிழமை (10.07.2025) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்டம் காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.