News June 23, 2024
தக்காளி விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ₹30 முதல் ₹40க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹80ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
Similar News
News November 17, 2025
WTC : 4-வது இடத்திற்கு இந்தியா சறுக்கல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. நடப்பு WTC-ல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 4 வெற்றி, 3 தோல்வி, ஒன்றில் டிரா கண்டுள்ளது. விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 2-வது மற்றும் 3-வது இடங்களில் தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன.
News November 16, 2025
இன்ஸ்டாவில் சூறாவளியாய் சுற்றும் PHOTOS

இமாச்சலில் நடைபெறும் ‘ரௌலானே’ என்னும் திருவிழாவின் புகைபடங்கள் SM-யில் சூறாவளியாக சுற்றி வருகிறது. X தளத்தில் ஒருநபர் பதிவிட, பின்னர் அதை பல்வேறு SM பயனர்களும் பதிவிட தொடங்கினர். அனைவரின் கவனத்தை ஈர்த்து, ஆர்வத்தை தூண்டிய இந்த திருவிழா, மார்ச் மாதத்தில் ஹோலிக்கு பின்னர் நடத்தப்படுகிறது. டிரெண்டிங்கில் உள்ள போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 16, 2025
பிரபல நடிகை காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

பிரபல பெங்காலி நடிகையான பத்ரா பாசு (65) கொல்கத்தாவில் காலமானார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பிரபல நாடக இயக்குநரும் நடிகருமான அசித் பாசுவின் மனைவியாவார். வங்கா நாடகம் மற்றும் சினிமா இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். அவரது மறைவிற்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


