News June 23, 2024

ஆர்பாட்டம் நடந்த நீதிமன்றத்தில் மனு

image

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து விருதுநகரில் நாளை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ் குமார் தாக்கல் செய்த அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு நாளை முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

Similar News

News October 14, 2025

விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் வரும் அக். 17ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

விருதுநகர் ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

விருதுநகர் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 50 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News October 14, 2025

விருதுநகர்: EB தொடர்பான புகாரா? உடனே செல்லுங்கள்…

image

விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (செவ்வாய்) காலை 11 மணிக்கு விருதுநகர் மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் பொறியாளர் லதா தலைமையில் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை விருதுநகர் மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!