News June 23, 2024
தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தோல்வி பயத்தால் அதிமுக புறக்கணித்ததாக கூறப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதால் அதிமுக புறக்கணித்திருப்பதாகவும், சூழல் மற்றும் காலத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது ராஜதந்திரம் என்றும், அதன்படி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை இபிஎஸ் எடுத்துள்ளார் என்றும் உதயகுமார் கூறினார்.
Similar News
News November 16, 2025
பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

பிரண்டையில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது. *சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் குணமாகும் *மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலிக்கு சிறந்த மருந்து *செரிமான சக்தியை அதிகரிக்கும் *ரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் *பிரண்டையில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி நிறைந்தது.
News November 16, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகினார்

பாஜகவில் இருந்து <<18296121>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்ட Ex மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பிஹார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ₹62,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், தவறுகளை சுட்டிக் காட்டினால் கட்சிக்கு விரோதமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 16, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க EPS காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அக்கூட்டணியில் தவெக இணையாது என நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்பதால், அவர்களோடு இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க 0.1% கூட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது CM வேட்பாளர் விஜய்தான் எனவும், கொள்கை முரண்பாடு இல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் பேசியுள்ளார்.


